அருணகிரி பரவு ஹரி - பகுதி 31


பாடல் 250 - நிணமொடு

புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
          பொலமணி மகுட சிரங்கள் தாமொரு பதுமாறிப்

புவியிடை யுருள முனிந்து கூர்கணை
     யுறுசிலை வளைய வலிந்து நாடிய
          புயலதி விறலரி விண்டு மால்திரு மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
          பொலமணி மகுட சிரங்கள் தாம் ஒரு பது மாறிப்

புவியிடை உருள முனிந்து கூர்கணை
     உறுசிலை வளைய வலிந்து நாடிய
          புயல் அதிவிறல் அரி விண்டு மால் திரு மருகோனே

பாடல் 264 - இபமாந்தர் 

உபசாந்த சித்த குருகுல
     பவபாண்ட வர்க்கு வரதன்மை
          யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்
     வடவேங்க டத்தி லுறைபவ
          னுயர்சார்ங்க சக்ர கரதலன்  மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

உபசாந்த சித்த குரு குல
     பவ பாண்டவர்க்கு வரதன் மை
          உருவோன் ப்ரசித்த நெடியவன்  ரிஷிகேசன்

உலகு ஈன்ற பச்சை உமை அணன்
     வடவேங்கடத்தில் உறைபவன்
          உயர் சார்ங்க சக்ர கரதலன்  மருகோனே

பாடல் - 231 சீதள வாரிஜ) - முராரி

பாடல் - 235 (தினமணி) - சார்ங்கபாணி

பாடல் - 236 - பூமாது உரமே அணி‌மால்‌ 

பாடல் 263 (மருமல்லி) - கருநெல்லி  மேனி அரி


பொருளுரை ஒலி வடிவம்:


Comments

Post a Comment