அருணகிரி பரவு ஹரி - பகுதி 13


பாடல் 78 (தலைவலி மருத்தீடு)

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு  மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

அலைகடல் அடைத்தே மகா கோர ராவணனை
     மணிமுடி துணித்து ஆவியே ஆன ஜானகியை
          அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு  மருகோனே


பாடல் 80 (திமிர உததி)

வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

வெம் அரவணையில் இனிது துயிலும்
     விழிகள் நளினன் மருகோனே

பாடல் 81 (பகர்தற்கரிதான)

நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
     நொடியிற்பரி வாக வந்தவன்  மருகோனே

பதம் பிரித்த வடிவம்:

நுதிவைத்த கரா மலைந்திடு களிறுக்க அருளே புரிந்திட
     நொடியில் பரிவாக வந்தவன்  மருகோனே

பொருளுரை ஒலி வடிவம்:



Comments