கந்தர் அந்தாதி - செய்யுள் 40
சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர
விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
சேமர
விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
சேமர
விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே
பதம் பிரித்த வடிவம்:
சேம ரவிக்கு அம் படையாக வீசு உபதேசம் முன்னூல்
சேமர்
அவிக்கு அம் பலம் தருவாய்; செருவாய வெஞ்சூர்
சே
மர விக்கம் திரித்தாய்; வருத்திய அன்றில் தென்றல்
சே
மர இக்கு அம்புய வாளி விண்டு இரை தெண்டிரையே
பொருள்:
இப்பாடலில், முருகனைப் பிரிந்திருப்பதால் துயருறும் பெண், எவையெல்லாம் தன் துயரை அதிகரிக்கின்றன என்று கூறுகிறாள்.
சேம ரவிக்கு அம் படையாக வீசு உபதேசம் முன்னூல் சேமர் அவிக்கு அம் பலம் தருவாய்
சேம
ரவிக்கு – சிவந்த சூரியனுக்கு
அம்
படையாக வீசு – நீரை அசுரரது தடையை விலக்கும் ஆயுதமாக இறைக்கின்ற
உபதேசம்
முன்னூல் – உபதேசத்தையும், முப்புரி நூலையும்
சேமர்
அவிக்கு – காப்பவர்களாகிய அந்தணர் அளிக்கும் அவிர்பாகத்திற்கு
அம்
பலம் தருவாய் – அழகிய நற்பயனை அளிப்பவனே!
சூரியன் உதிப்பதை தடை செய்யும் அசுரர்களை விலக்க, நீரை இறைக்கும் அந்தணர் நடத்தும் யாகத்திற்கு நற்பயன் அளிப்பவனே!
செருவாய வெஞ்சூர் சே மர விக்கம்
திரித்தாய்
செருவாய வெஞ்சூர் – போர் செய்யும் கொடிய சூரனாகிய
சே
மர விக்கம் – வயிரம் பொருந்திய மாமரத்தினால் தேவர்கட்குண்டாய விக்னம்
திரித்தாய்
– ஒழித்தவனே!
போர் செய்வதில் வல்லவனும்
மாமரமாய் நின்றவனுமான சூரனால் தேவர்களுக்கு உண்டான விக்கினத்தை ஒழித்தவனே!
வருத்திய அன்றில் தென்றல்
சே மர இக்கு அம்புய வாளி விண்டு இரை தெண்டிரையே
வருத்திய – என்னைத் துன்புறுத்துகின்ற
அன்றில்
– (காம சின்னமாகிய) அன்றில் பட்சியும்
தென்றல்
– காமனது தேராகிய தென்றல் காற்றும்
சே
– (கழுத்து மணி ஒலிப்பதனால்) ரிஷபமும்
மர
இக்கு – கரும்பு வில்லும்
அம்புய
வாளி – தாமரைப் பூவாகிய மன்மதனுடைய பாணமும்
விண்டு
– ஆர்ப்பரித்து
இரை
– முழங்குகின்ற
தெண்டிரையே – தெளிந்த திரையை உடைய கடலுமே
[என்னை வருத்துகின்றன]
என்னை வருத்துபவை – அன்றில்
பறவை, தென்றல் காற்று, காளையின் கழுத்தில் ஒலிக்கும் மணி, கரும்பு வில், தாமரை மலராகிய
அம்பு, கடல்.
பொழிப்புரை:
சூரியனுக்கு அம்பாக சந்தியாவந்தனம் செய்யும் முப்புரி நூல் அணிந்த வேதியரின் வேள்விக்குத் தக்க பலன் அளிப்பவனே! மாமரமாய் நின்ற சூரனை வென்றவனே! காளையின் மணியோடு காமனது சின்னங்களாகிய அன்றிலும், தென்றலும், கரும்பும், தாமரைப்பூவும், கடலும் என்னை வருத்துகின்றன.
.jpg)
Comments
Post a Comment